Tuesday, May 28, 2013
ரிஷபம் ராசிகான குரு பெயர்ச்சி பலன்கள் 28.5.2013 முதல் 12.6.2014 வரை
28.05.2013தேதி இரவு, 9:18PM மணிக்கு, குரு பகவான், ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு பிரவேசிக்கிறார்.
மனித வாழ்க்கையின் ஏற்றம்-இறக்கம் எல்லாமே பூர்வ புண்ணியத்தின் அடிப்படையில்தான் அமைகின்றன. பூர்வ புண்ணியத்திற்கான பலன்களை அளிப்போர் நவகிரஹங்கள் எனப் போற்றப்பெறும் நவநாயகர்களே ஆவர். ஒன்பது கிரஹங்களில் ஐந்தாவதாக - நடு நாயகராகத் திகழ்பவர் குருபகவான். தேவர்களின் குருவாகிய குருபகவான் பூரணமான சுபகிரஹம் ஆவார். குருபகவானின் அருட்பார்வைக்கு அளப்பரிய ஆற்றல் உண்டு.
இவ் ராசியில் பிறந்த அனைவருக்குமான பொதுப்பலன்களே இங்கு சொல்லப்பெற்றுள்ளன. அவரவர் ஜாதகத்தில் இருக்கும் கிரகங்களின் நிலை, பலம், பார்வை, திசா புத்தி போன்றவற்றை பொறுத்து ஒவ்வொருவருக்கும் இப் பலன்கள் மாறுபடலாம் என்பதை மனதிற் கொள்ளக.
அதனால்தான் ”குரு பார்க்க கோடி நன்மை” ”குரு பார்வை தோஷ நிவர்த்தி” என்றெல்லாம் குருபகவானின் அருள்திறம் போற்றப்பெறுகின்றது. குரு பெயர்ச்சி என்பது குருபகவான் ராசி மண்டலத்தில் ஒரு ராசியில் இருந்து மற்றோர் ராசிக்குச் செல்லும் நிகழ்வாகும். இந்த குருப்பெயர்ச்சி என்பது சுமாராக ஓர் ஆண்டிற்கு ஒருமுறை நிகழ்வது ஆகும். நவகிரகங்களில் பூரண சுபகிரகமான குருபகவான், ஒவ்வொரு ராசியில் சஞ்சரிக்கும் போதும் பன்னிரண்டு ராசிகளைச் சேர்ந்த அன்பர்களுக்கு ஏற்படக்கூடிய பலாபலன்களே கோசார பலன்கள் எனப்படும்.
பொதுவாக குருபகவான் ஒரு ராசிக்கு 2, 5, 7, 9, 11 போன்ற இடங்களில் சஞ்சரிக்கும்போது சுப பலன்களையும் 1, 3, 4, 5, 8, 10, 12 இடங்களில் சஞ்சரிக்கும்போது அசுப பலன்களையும் வழங்குவார் என்பது விதி. ஆனால், இது பொதுவான விதிதான். அவரவருடைய சுய ஜாதகத்தில் அமைந்துள்ள கிரக நிலைகளின்படியும், தசாபுத்திகளின் படியும் கோசார பலன்கள் மாறுபடும்.
ரிஷபம்: கார்த்திகை 2, 3, 4 பாதங்கள், ரோகிணி, மிருகசீர்ஷம் 1, 2 பாதங்கள் வரை நட்சத்திரங்களில் பிதந்தவர்களுக்கு…….)
வெற்றிகள் குவியும்
வனத்தில் மேய்ந்தாலும் இனத்தில் வந்து சேரணும் என்ற பழமொழியை அறிந்த நீங்கள், பல நாடு நகரம் சென்றாலும் தாய்மண்ணை மறக்க மாட்டீர்கள். இயற்கையை அதிகம் நேசிக்கும் நீங்கள், எதிர்நீச்சல் போடுவதில் வல்லவர்கள். கடந்த ஓராண்டு காலமாக உங்கள் ராசிக்குள் உட்கார்ந்து கொண்டு எப்போதும் மருந்து, மாத்திரையுமாக உங்களை பாடாய்ப்படுத்தினாரே குருபகவான். குடும்பத்தில் சாதாரணமாகப் பேசினாலும் சண்டையில் முடிந்ததே! திறமை இருந்தும் அங்கீகாரம் கிடைக்காமல் அவதிப் பட்டீர்களே!
சந்தேகத்தால் கணவன்-மனைவி பிரிந்தீர்களே! ஈகோவால் சில நல்ல வாய்ப்புகளை இழந்தீர்களே! தாழ்வு மனப்பான்மையால் தள்ளியிருந்தீர்களே! இப்படி உங்களை சிக்கவைத்து வேடிக்கை பார்த்த குருபகவான் 28.5.2013 முதல் 12.6.2014 வரையுள்ள காலகட்டத்தில் உங்கள் ராசியை விட்டு விலகி தனவீடான 2ம் வீட்டில் அமர்வதால் சோர்ந்திருந்த நீங்கள் சுறுசுறுப்பாவீர்கள்.
எதிர்பார்த்த வகையில் பணம் வந்து எல்லாவற்றையும் சமாளிப்பீர்கள். குடும்ப ஸ்தானத்தில் குரு அமர்வதால் புயல் வீசிய வீட்டில் அமைதி திரும்பும். எப்போது பார்த்தாலும் முக வாட்டத்துடனும் ஒருவித பதட்டத்துடனும் வலம் வந்தீர்களே! இனி அந்த பயம் நீங்கும். முகம் மலரும். தோற்றப் பொலிவு கூடும். பெரிய நோய் இருப்பதை போன்ற பிரமையிலிருந்து விடுபடுவீர்கள். உடல் நலம் சீராகும். பிள்ளைகள் நல்ல வழிக்கு திரும்புவார்கள்.
அவர்களின் பிடிவாதம் தளரும். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். எதிர்மறை எண்ணங்கள், கூடாப்பழக்க வழக்கமுள்ளவர்களிடமிருந்து விலகுவீர்கள். முன்கோபத்தால் நல்ல நண்பர்கள், விஐபிகளை எல்லாம் இழந்தீர்கள்! இனி கனிவாகப் பேசுவீர்கள்.
ஆடை, ஆபரணம் சேரும். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றி புதிதாக வாங்குவீர்கள். குருபகவான் ஆறாவது வீட்டை பார்ப்பதால் கடன் பிரச்னையால் கௌரவம் குறைந்துவிடுமோ என்ற பயம் நீங்கும். எதிர்ப்புகள் அடங்கும். வழக்கு சாதகமாகும். நல்லவர்களின் நட்பு கிடைக்கும். Thana143.blogspot.com ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். சருமத்தில் இருந்த நமைச்சல், தேமல், முடி உதிர்தல் நீங்கும். குருபகவான் எட்டாவது வீட்டை பார்ப்பதால் அயல்நாடு செல்ல விசா கிடைக்கும்.
மூச்சுத் திணறல், மூச்சுப் பிடிப்பு, சளித் தொந்தரவுகள் நீங்கும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். திடீர் பயணங்கள் அதிகரிக்கும். கோயில் விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். குருபகவான் பத்தாவது வீட்டையும் பார்ப்பதால் பொதுக் காரியங்களில் ஈடுபட்டு புகழடைவீர்கள். புதுவேலை கிடைக்கும். சங்கம், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.
குருபகவானின் சஞ்சாரம்:
28.5.2013 முதல் 25.6.2013 வரை உங்களின் சப்தம, விரயாதிபதியான செவ்வாயின் மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் சகோதரர் உதவுவார். உங்களின் பலவீனத்தை சரி செய்து கொள்வீர்கள். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். மாமனார், மாமியார் உதவுவார்கள். பூர்வீகச் சொத்திலிருந்த வில்லங்கம் பேச்சுவார்த்தை மூலம் சுமுகமாக முடியும்.
மனைவிவழி உறவினர்களால் நன்மை உண்டு. திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு கூடி வரும். 26.6.2013 முதல் 28.8.2013 வரை மற்றும் 27.1.2014 முதல் 12.4.2014 வரை ராகு பகவானின் திருவாதிரை நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் திடீர் பணவரவு உண்டு. மறைமுக எதிரிகளை வீழ்த்தும் வல்லமை உண்டாகும். ஷேர் மூலம் பணம் வரும். திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். சொத்து சேரும். வீட்டை விரிவுபடுத்துவீர்கள்.
வாகனம் வாங்குவீர்கள். 29.8.2013 முதல் 12.11.2013 வரை உங்களின் அஷ்டம, லாபாதிபதியான குருபகவான் தன் நட்சத்திரமான புனர்பூசம் நட்சத்திரத்தில் செல்வதால் ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமை அதிகரிக்கும். அநாவசியச் செலவுகளை தவிர்க்கப் பாருங்கள். புது பொறுப்புகள், பதவிகளை ஏற்க வேண்டாம். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்த முயற்சிப்பார்கள்.
13.11.2013 முதல் 26.1.2014 வரை குருபகவான் புனர்பூசம் நட்சத்திரத்திலும் 27.1.2014 முதல் 11.3.2014 வரை திருவாதிரை நட்சத்திரத்திலும் வக்ர கதியில் செல்வதால் இக்காலகட்டத்தில் திடீர் பயணங்கள், வீண் செலவுகள், ஒரே நேரத்தில் பல வேலைகளை பார்க்க வேண்டிய சூழ்நிலைகள் வந்து செல்லும். நவீன மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். புதிய நண்பர்களால் உற்சாகமடைவீர்கள்.
வியாபாரத்தில் கடந்த ஓராண்டு காலமாக ஏற்பட்ட நஷ்டங்களை சரி செய்வீர்கள். புதிய சரக்குகளை கொள்முதல் செய்வீர்கள். பற்று வரவு உயரும். பழைய பாக்கிகள் வசூலாகும். ஏமாற்றிக் கொண்டிருக்கும் வேலையாட்களை நீக்கி விட்டு தகுதியான, அனுபவமிக்க, பொறுப்புணர்வு வாய்ந்த வேலையாட்களை பணியில் அமர்த்துவீர்கள்.Thana143.blogspot.com பெரிய நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். பங்குதாரர்களுடன் இருந்த மோதல்கள் விலகும். புது ஏஜென்சி எடுப்பீர்கள்.
சந்தையில் மதிப்பு கூடும். ரியல் எஸ்டேட், கணினி உதிரி பாகங்கள், கட்டிடம், கெமிக்கல் வகைகளால் லாபம் கூடும். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்பட்டீர்களே, பழிவாங்கப்பட்டீர்களே! இனி இதுவரை இருந்து வந்த அவமானங்கள், ஏமாற்றங்கள் நீங்கும். உங்களின் கடின உழைப்பை அதிகாரிகள் புரிந்து கொள்வார்கள்.
வேலையில் ஆர்வம் பிறக்கும். சக ஊழியர்கள் மத்தியில் இருந்த அதிருப்தி விலகும். பதவி உயர்வுக்காக உங்களது பெயர் பரிசீலிக்கப்படும். சம்பளம் உயரும். மூத்த அதிகாரிகள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். சிலருக்கு அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவனத்திலிருந்து புது வாய்ப்புகள் வரும். வருமானம் பெருகும்.
கன்னிப் பெண்களே! நல்லவர்களின் நட்பு கிட்டும். திருமணம் கூடிவரும். உங்களின் எதிர்பார்ப்பிற்கு தகுந்தாற்போல் கணவர் அமைவார். சிலருக்கு வேற்று மாநிலத்தில் வேலை கிடைக்கும். Thana143.blogspot.com சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். நீண்டநாள் ஆசைகள் நிறைவேறும். மாணவ-மாணவிகளே! கணக்கு பாடத்துடன் இருந்த பிணக்கு நீங்கும். படிப்பில் ஈடுபாடு அதிகரிக்கும்.
வகுப்பறையில் சக மாணவர்கள் மத்தியில் பாராட்டப்படுவீர்கள். உயர்கல்வியில் அதிக மதிப்பெண்ணுடன் வெற்றி பெற்று எதிர்பார்த்த கல்விப் பிரிவில் சேருவீர்கள். கலைத்துறையினரே! மாறுபட்ட சிந்தனை பிறக்கும். வீண் வதந்திகளிலிருந்து விடுபடுவீர்கள். மூத்த கலைஞர்களின் ஆதரவால் உங்களின் புது முயற்சிகள் வெற்றியடையும். வசதி, வாய்ப்புகள் பெருகும். கிசுகிசுத் தொல்லை நீங்கும்.
அரசியல்வாதிகளே! தலைமைக்கு நீங்கள் நெருக்கமாக இருந்தாலும் மாவட்டமும் வட்டமும் விரித்த வலையில் சிக்கினீர்களே! இனி பெரிய பொறுப்புகள் தேடி வரும். Thana143.blogspot.com தேர்தலில் வெற்றி கிட்டும். விவசாயிகளே! மாற்றுப்பயிர் செய்து அதிக லாபம் ஈட்டுவீர்கள். வாய்க்கால், வரப்புச் சண்டை தீரும். மகளின் திருமணத்தை விமரிசையாக முடிப்பீர்கள்.
இந்த குரு மாற்றம் சமூகத்தில் பெரிய அந்தஸ்தையும் வீடு, மனை, வாகன யோகத்தையும் அள்ளித் தரும்.
பரிகாரம்
சென்னை-பாரிமுனையில் உள்ள கந்தசாமி கோயிலுக்குச் சென்று தரிசியுங்கள். அன்னதானம் செய்யுங்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment