Tuesday, May 28, 2013

மிதுனம் ராசிகான குரு பெயர்ச்சி பலன்கள் 28.5.2013 முதல் 12.6.2014 வரை


28.05.2013தேதி இரவு, 9:18PM மணிக்கு, குரு பகவான், ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு பிரவேசிக்கிறார்.

மனித வாழ்க்கையின் ஏற்றம்-இறக்கம் எல்லாமே பூர்வ புண்ணியத்தின் அடிப்படையில்தான் அமைகின்றன. பூர்வ புண்ணியத்திற்கான பலன்களை  அளிப்போர் நவகிரஹங்கள் எனப் போற்றப்பெறும் நவநாயகர்களே ஆவர். ஒன்பது கிரஹங்களில் ஐந்தாவதாக - நடு நாயகராகத் திகழ்பவர்  குருபகவான். தேவர்களின் குருவாகிய குருபகவான் பூரணமான சுபகிரஹம் ஆவார். குருபகவானின் அருட்பார்வைக்கு அளப்பரிய ஆற்றல் உண்டு.

இவ் ராசியில் பிறந்த அனைவருக்குமான பொதுப்பலன்களே இங்கு சொல்லப்பெற்றுள்ளன. அவரவர் ஜாதகத்தில் இருக்கும் கிரகங்களின் நிலை, பலம், பார்வை, திசா புத்தி போன்றவற்றை பொறுத்து ஒவ்வொருவருக்கும் இப் பலன்கள் மாறுபடலாம் என்பதை மனதிற் கொள்ளக.

அதனால்தான் ”குரு பார்க்க கோடி நன்மை” ”குரு பார்வை தோஷ நிவர்த்தி” என்றெல்லாம் குருபகவானின் அருள்திறம் போற்றப்பெறுகின்றது. குரு  பெயர்ச்சி என்பது குருபகவான் ராசி மண்டலத்தில் ஒரு ராசியில் இருந்து மற்றோர் ராசிக்குச் செல்லும் நிகழ்வாகும். இந்த குருப்பெயர்ச்சி என்பது  சுமாராக ஓர் ஆண்டிற்கு ஒருமுறை நிகழ்வது ஆகும். நவகிரகங்களில் பூரண சுபகிரகமான குருபகவான், ஒவ்வொரு ராசியில் சஞ்சரிக்கும் போதும்  பன்னிரண்டு ராசிகளைச் சேர்ந்த அன்பர்களுக்கு ஏற்படக்கூடிய பலாபலன்களே கோசார பலன்கள் எனப்படும்.

பொதுவாக குருபகவான் ஒரு ராசிக்கு 2, 5, 7, 9, 11 போன்ற இடங்களில் சஞ்சரிக்கும்போது சுப பலன்களையும் 1, 3, 4, 5, 8, 10, 12 இடங்களில்  சஞ்சரிக்கும்போது அசுப பலன்களையும் வழங்குவார் என்பது விதி. ஆனால், இது பொதுவான விதிதான். அவரவருடைய சுய ஜாதகத்தில் அமைந்துள்ள  கிரக நிலைகளின்படியும், தசாபுத்திகளின் படியும் கோசார பலன்கள் மாறுபடும்.


மிதுனம்: மிருக சீர்ஷம் 3, 4 பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம், 1, 2, 3 பாதங்கள் வரை நட்சத்திரங்களில் பிதந்தவர்களுக்கு…….)

பணப்புழக்கம் அதிகரிக்கும்
ஆயிரம் காசு உள்ளவன் அமைதியாய் இருப்பான், அரைக்காசு உள்ளவன் ஆடித் துள்ளுவான் என்பதை அறிந்த நீங்கள், பணம் வந்த பின்பும் பகட்டாக வாழத் தெரியாதவர்கள். இதுவரை உங்கள் ராசிக்கு 12ம் வீட்டில் அமர்ந்து வீண்பழி, அலைச்சல், திடீர் பயணங்கள், செலவினங்கள், தூக்கமின்மையை தந்த குருபகவான் 28.5.2013 முதல் 12.6.2014 வரை உங்கள் ராசிக்குள்ளேயே அமர்ந்து ஜென்ம குருவாக தொடர இருப்பதால் ஆரோக்யத்தில் கூடுதல் கவனம் செலுத்தப் பாருங்கள். தலைச்சுற்றல், காய்ச்சல், மஞ்சள் காமாலை, ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைதல் வரக்கூடும். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. காய், கனி, கீரை வகைகளை ஒதுக்காதீர்கள்.

‘ஜென்மத்தில் சீதையை ராமர் சிறை வைத்தது போல்’ என்ற பாடல்படி கணவன்-மனைவிக்குள் பிரச்னைகள் அதிகரிக்கும்.

ஒரே வீட்டில் இருந்துகொண்டே ஒருவருக்கொருவர் சில நாட்களில், சில நேரங்களில் மௌனமாக இருக்க வேண்டியது வரும். பெரிய நோய் இருப்பதைப்போல் பயம் வந்துபோகும். மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது நல்லது. மெடிக்ளைம் எடுத்துக் கொள்ளுங்கள். ஒரேநாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளை பார்க்க வேண்டியது வரும். இதை முதலில் முடிப்பதா, அதை முதலில் முடிப்பதா என்ற டென்ஷன் இருக்கும்.  உங்களின் திறமை மீது அவ்வப்போது சந்தேகம் வரும். ஆழ்ந்த உறக்கம் இல்லாமல் அடிக்கடி மனஅழுத்தங்களும் வரக்கூடும். குருபகவான் 7ம் வீட்டை பார்ப்பதால் கணவன்-மனைவிக்குள் அன்பு குறையாது. திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுபச் செலவுகளும் அதிகரிக்கும்.

அரசுக் காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். ஊர் பொதுக் காரியங்களை முன்னின்று நடத்துவீர்கள். குருபகவான் உங்களின் 5ம் வீட்டை பார்ப்பதால் புத்திர பாக்யம் உண்டு. பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் சாதகமாக அமையும். மகள் உங்களை புரிந்து கொள்வாள். மகனின் அலட்சியப்போக்கு மாறும். பூர்வீகச் சொத்துப் பங்கு கைக்கு வரும். குடும்பத்தினருடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். சகோதர, சகோதரிகளால் ஆதாயமும் உண்டாகும். குரு உங்களின் 9ம் வீட்டை பார்ப்பதால் பணப்புழக்கம் கணிசமாக உயரும். தந்தையாரின் உடல் நிலை சீராகும். அவருடன் இருந்த மனவருத்தம் நீங்கும். பிதுர்வழி சொத்துப் பிரச்னை நல்ல விதத்தில் முடியும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். உயர்ரக ஆபரணம் வாங்குவீர்கள்.

குருபகவானின் சஞ்சாரம்:
28.5.2013 முதல் 25.6.2013 வரை இக்காலகட்டங்களில் உங்கள் சஷ்டம லாபாதிபதியான செவ்வாயின் மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் செலவு கூடும். ஆடம்பரச் செலவுகளை தவிர்க்கப் பாருங்கள். மறைமுக எதிர்ப்பு, சிறுசிறு அவமானம் வந்துசெல்லும். கை, காலில் அடிபடக் கூடும். சொத்து வாங்கும்போது தாய்ப் பத்திரத்தை சரி பார்த்துக் கொள்ளுங்கள். சகோதர, சகோதரிகளால் சங்கடங்கள் வரும். குடும்பத்தினரைப் பற்றி யாரிடமும் தரக் குறைவாக பேச வேண்டாம். பழைய கடனை நினைத்து கலங்குவீர்கள். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம்.

26.6.2013 முதல் 28.8.2013 வரை மற்றும் 27.1.2014 முதல் 12.4.2014 வரை ராகுபகவானின் திருவாதிரை நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் சின்னச் சின்ன மன சஞ்சலங்கள், வீண் டென்ஷன், பிறர் மீது நம்பிக்கையின்மை வந்து செல்லும். பூர்வீக சொத்துப் பிரச்னை வெடிக்கும். பிள்ளைகள் இன்னும் கொஞ்சம் கடினமாக உழைத்தால் நல்லது என்று நினைப்பீர்கள்.

உங்கள் இளமை காலத்துடன் அவர்களை ஒப்பிட்டுப் பார்த்து கொஞ்சம் பெருமூச்சு விடுவீர்கள். உறவினர்களுடன் இடைவெளி விட்டு பழகுவது நல்லது. இக்காலக்கட்டத்தில் திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு யூரினரி இன்பெக்ஷன், செரிமானக் கோளாறு, தோல் நோய் வந்து நீங்கும்.

29.8.2013 முதல் 12.11.2013 வரை உங்களின் சப்தம, ஜீவனாதிபதியுமான குருபகவான் தன் நட்சத்திரமான புனர்பூசம் நட்சத்திரத்தில் செல்வதால் பண விஷயத்தில் கறாராக இருங்கள். யாருக்கும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம்.Thana143.blogspot.com  மனைவியுடன் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. கடந்த காலத்தை நினைத்து அவ்வப்போது கொஞ்சம் டென்ஷனாவீர்கள். நல்ல வாய்ப்புகளையெல்லாம் பயன்படுத்தாமல் விட்டுவிட்டோமே என்றெல்லாம் வருத்தப்படுவீர்கள்.

உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். விரும்பத்தகாத இடமாற்றம் வரும். மனைவிவழி உறவினர்களுடன் கருத்து மோதல்கள் வரும். இக்காலகட்டத்தில் புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஆரோக்யத்தில் அக்கறை காட்டுவது நல்லது.

13.11.2013 முதல் 26.1.2014 வரை குருபகவான் புனர்பூசம் நட்சத்திரத்திலும் 27.1.2014 முதல் 11.3.2014 வரை திருவாதிரை நட்சத்திரத்திலும் வக்ர கதியில் செல்வதால் வீண் பழி, ஏமாற்றம், பணப்பற்றாக்குறை வந்துபோகும். பழைய நண்பர்கள் உதவுவார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களால் ஆதாயமடைவீர்கள். வியாபாரத்தில் ஏற்ற-இறக்கங்கள் இருக்கத்தான் செய்யும். Thana143.blogspot.com கடையை மாற்ற வேண்டிய நிர்ப்பந்தம் உண்டாகும். போட்டிகளை சமாளிக்க கடுமையாக உழைக்க வேண்டி வரும். வேலையாட்களால் விரயம் ஏற்படும். புதிதாக வரும் விளம்பரங்களைப் பார்த்து அறிமுகமில்லா தொழிலில் முதலீடு செய்ய வேண்டாம். பழைய வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ளுங்கள்.

பங்குதாரர்களுடன் சச்சரவுகள் வரும். கமிஷன், புரோக்கரேஜ், ஸ்டேஷனரி, எரிபொருள் வகைகளால் ஆதாயமடைவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்களின் திறமையை சோதிப்பார்கள். வளைந்து கொடுத்துப் போவது நல்லது. கூடுதல் நேரம் ஒதுக்கி வேலை பார்க்க வேண்டி வரும். சக ஊழியர்களால் உங்கள் பெயர் கெடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

உயரதிகாரிகளால் அவ்வப்போது அலைக்கழிக்கப்பட்ட பின்னர் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். பதவி உயர்வுக்கான தேர்வில் வெற்றி பெறுவீர்கள். கன்னிப் பெண்களே! மாதவிடாய்க் கோளாறு, மூச்சுத் திணறல் வந்து நீங்கும். Thana143.blogspot.com காதல் விவகாரங்களில் சிக்காதீர்கள். உயர்கல்வியில் கவனம் செலுத்துங்கள். பெற்றோரை தவறாகப் புரிந்து கொள்ள வேண்டாம்.

வேலை தாமதமாக கிடைக்கும். மாணவ-மாணவிகளே! விடைகளை எழுதிப் பாருங்கள். சிலர் விடுதியில் தங்கிப் படிக்க வேண்டி வரும். வகுப்பறையில் முன் வரிசையில் அமருங்கள். தெரியாதவற்றை ஆசிரியரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். அரசியல்வாதிகளே! தொகுதி நிலவரங்களை உடனுக்குடன் மேலிடத்திற்கு தகவல் தருவது நல்லது. உட்கட்சி பூசலில் ஆர்வம் காட்டாதீர்கள். தலைமையை பகைத்துக் கொள்ள வேண்டாம். Thana143.blogspot.com சகாக்கள் சிலர் உங்கள் மீது அதிருப்தியடைவார்கள். கலைத்துறையினரே! புதிய நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து ஏமாற வேண்டாம். உங்களின் படைப்புகளை போராடி வெளியிட வேண்டி வரும். விவசாயிகளே! எலித் தொல்லை அதிகமாகும். கரும்பு, தேக்கு லாபம் தரும். குறுகிய காலப் பயிர்களால் நஷ்டம் வரும்.

இந்த குரு பெயர்ச்சி எதிர்காலம் பற்றிய ஒரு பயத்தையும் கேள்விக்குறியையும் தந்தாலும் அவ்வப்போது அனுசரித்துப் போவதன் மூலமாக ஓரளவு சாதிக்க வைக்கும்.

பரிகாரம்
மயிலாடுதுறையில் மேதா தட்சிணாமூர்த்தி என்றழைக்கப்படும் வள்ளலார் கோயிலுக்குச் சென்று வாருங்கள். ஏழைப் பெண்ணின் திருமணத்திற்கு உதவுங்கள்.

No comments:

Post a Comment