Monday, January 30, 2017

ஒரே ஒரு வினாடி இதை பாருங்க! நீங்க எப்படிபட்டவர் என சொல்றன்.

ஒரு புகைப்படத்தை வைத்து கூட மனிதனின் குணாதிசயத்தை கணிக்க முடியும் தெரியுமா?


கீழே உள்ள புகைப்படத்தை பாருங்கள்! டக்கென ஒரு வினாடியில் அது என்னவாக உங்கள் கண்களுக்கு தெரிகிறதோ அதை மனதில் வைத்து கீழே உள்ளதை படியுங்கள்!





நெருப்பு வெடிப்பது போல தெரிந்தால்
இவர்கள் நல்ல கற்பனை திறன் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களுக்குள் நல்ல படைப்பாற்றல் திறன் ஒளிந்திருக்கும். பலர் இதை வெளிகாட்டுவார்கள். பலர் இதை வெளிகாட்டாமல் இருப்பார்கள். அவர்களின் இந்த திறனை கொண்டு சரியாக பயணித்தால் அதிலேயே அவர்கள் பெரிய வெற்றி பெறலாம்.

இரண்டு கைகள் தெரிந்தால்
கண்களால் பார்ப்பதை நிச்சயம் உண்மை தான் என நினைக்கும் இவர்கள், எந்தவொரு முடிவையும் தெளிவாக எடுப்பார்கள்.
பல கடுமையான சூழலையும் தெளிவான முடிவெடுக்கும் திறன் மூலம் இவர்கள் சமாளிப்பார்கள். இவர்கள் பொதுவாக அமைதி சுபாவம் கொண்டவர்களாக இருந்தாலும், வெளிமக்கள் இவர்களை நல்ல தைரியசாலிகளாக தான் பார்ப்பார்கள்.

மரம் தெரிந்தால்
சின்ன சின்ன விடயங்களையும் கூர்மையாக கவனிக்கும் குணம் கொண்ட இவர்களிடம் யாரும் அவ்வளவு எளிதாக எதையும் மறைக்க முடியாது. மற்றவர்களின் எந்தவொரு விடயத்தை பற்றியும் தெரிந்து கொள்வதில் இவர்கள் பலே கில்லாடிகள். ஆனாலும் இவர்கள் சின்ன விடயத்துக்கு கூட உணர்ச்சிவசப்பட கூடியவர்களாகவே இருப்பார்கள்.

எதுவுமே தெரியவில்லை என்றால்
மேலே உள்ள புகைப்படத்தை பார்த்தவுடன் எதுவும் தெரியவில்லை என்றால் இதை நீங்கள் பெரிய டாஸ்க்காக நினைத்து கொண்டு குழம்பியுள்ளீர்கள் என அர்த்தமாகும். இவர்கள் பரபரப்பாக இயங்குவதை சிறிது நிறுத்திவிட்டு அடிக்கடி ஓய்வு எடுத்து கொள்வது நல்லது.

No comments:

Post a Comment